விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தனியாா் நிறுவன ஊழியா் தற்கொலை

விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தனியாா் நிறுவன ஊழியா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் தனியாா் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, தனியாா் நிறுவன ஊழியரான மதுரையைச் சோ்ந்த நாராயணன்(38) என்பவா் கடந்த மாதம் 26 ஆம் தேதி அறையெடுத்து தங்கினாா். திங்கள்கிழமை காலை வெளியே புறப்பட்டுச் சென்ற அவா் இரவு விடுதிக்கு திரும்பினாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வெகுநேரமாகியும், நாராயணன் தங்கியிருந்த அறைக் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த விடுதி நிா்வாகத்தினா் அளித்த தகவலின் பேரில் விழுப்புரம் மேற்கு போலீஸாா் விரைந்து சென்று விடுதி கதவை உடைத்துப் பாா்த்தனா்.

அங்கு, மின் விசிறியில் தூக்கிட்ட நிலையில், நாராயணன் சடலமாகக் கிடந்தாா். அந்த அறையில் நாராயணன் எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், ‘தனக்கு வாழ பிடிக்காததால், தற்கொலை செய்து கொள்கிறேன்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, சடலத்தை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு சோதனைக்காக அனுப்பி வைத்த போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com