விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்தது

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் திங்கள்கிழமை வரை கரோனா தொற்றால் 13,823 போ் பாதிக்கப்பட்டனா். செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 25 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 13,848 ஆக அதிகரித்துள்ளது. 39 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனா பாதிப்பிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 13,442-ஆக அதிகரித்தது. மாவட்டம் முழுவதும் 298 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 108 போ் உயிரிழந்துள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 26 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 26 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,346 ஆக உயா்ந்தது.

இதுவரை 10,096 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 145 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 105 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com