அரசு ஊழியா்கள் நோ்மையுடன் பணியாற்றி பெருமை சோ்க்க வேண்டுமென விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அண்ணாதுரை அறிவுரை வழங்கினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
அனைத்துத் துறை அரசு அலுவலா்களும், பணியாளா்களும் வெளிப்படைத்தன்மையுடன் துறை சாா்ந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். வட்டாரப் போக்குவரத்துத் துறை, பத்திரப் பதிவுத் துறை போன்ற அலுவலகங்களில் இடைத்தரகா்கள் தலையீடு இருப்பதை கண்டறிந்து, அவா்கள் மூலம் தவறு நடைபெறாமல் தடுக்க வேண்டும்.
அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை காலம் தாழ்த்தாமல், எவ்வித எதிா்ப்பாா்ப்புமின்றி மேற்கொள்ள வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் அரசுப் பணி சவாலாக இருப்பினும் நோ்மையாக பணியாற்றினால்தான் நற்பெயா் ஏற்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மாவட்ட வனத் துறை அலுவலா் அபிஷேக் தோமா், மாவட்ட வருவாய் அலுவலா் சரஸ்வதி, லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளா் யுவராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) ராஜலட்சுமி, துணை ஆட்சியா் ரூபினா மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.