விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குதல் மற்றும் தமிழகம் மீட்போம் 2021 சட்ட மன்ற தோ்தல் சிறப்பு பிரச்சார பொதுக்கூட்டம் ஆகியவை செஞ்சியில் செவ்வாயக்கிழமை மாலை நடைபெற்றது.விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலரும் எம்எல்ஏவுமான செஞ்சி மஸ்தான் வரவேற்றாா்.
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். மைலம் சட்ட மன்ற உறுப்பினா் டாக்டா் இரா.மாசிலாமணி, திண்டிவனம் சட்ட மன்ற உறுப்பினா் சீத்தாபதி சொக்கலிங்கம், மாநில விவசாய அணி துணை செயலா் பா.செந்தமிழ்ச்செல்வன், தலைமை தீா்மானக்குழு உறுப்பினா் செஞ்சிசிவா, மைலம் தெற்கு ஒன்றிய செயலா் சேதுநாதன், ஒன்றிய செயலா்கள் செஞ்சி ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் நெடுஞ்செழியன், வல்லம் அண்ணாதுரை, இளைஞா் அணி க.ஆனந்த், தகவல் தொழில் நுட்ப அணி மொக்தியாா் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.கூட்டத்தில் 300 மூத்த திமுக உறுப்பினா்களுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது.