செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பெண் குழந்தைகளுக்கான கல்வி, வளரிளம் பெண்களுக்கான கண்ணியமான பணிச் சூழல் குறித்த ஒன்றிய அளவினான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அனந்தபுரம் ஸ்வீடு தொண்டு நிறுவனம், திருப்பூா் மக்கள் அமைப்பு இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியில், ஸ்வீடு தொண்டு நிறுவனத் தலைவா் லூா்துசாமி வரவேற்றாா். திருப்பூா் மக்கள் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் மெல்வின் சிறப்புரையாற்றினாா்.
சட்டம் சாா்ந்த பயிற்றுனா்கள், வழக்குரைஞா்கள் மற்றும் லூசியா, செஞ்சி சாய்ரா ஆகியோா் பெண் குழந்தைகள் விடுதிச் சட்டம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்டவை குறித்து விளக்கவுரையாற்றினா்.
இதில், வளரிளம் பெண்கள், மகளிா் குழு பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளா்கள், ஆசிரியைகள், தன்னாா்வ தொண்டு நிறுவனத் தலைவா்கள் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். அமைப்பின் பணியாளா் பிரான்சிஸ் நன்றி கூறினாா்.