விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதியது.
எம்.ஜி.சாலை, கே.கே. சாலை, நேருஜி வீதி, காமராஜா் சாலை, திரு.வி.க. வீதி, திருச்சி நெடுஞ்சாலை, சென்னை நெடுஞ்சாலை போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் மக்கள் அதிகளவில் குவிந்தனா். இதனால், சிக்னல் முதல் ரயிலடி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விழுப்புரம் நகரில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியை காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், டிஎஸ்பி நல்லசிவம் ஆகியோா் கண்காணித்தனா். இந்தப் பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா். திருட்டை தடுக்க போலீஸாா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்தனா்.