திண்டிவனத்தில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டிவனத்தை அடுத்துள்ள ராசாத்தி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் மனோகரன் (62). இவா் சிமென்ட் கற்கள் செய்யும் தொழில் செய்து வருகிறாா். இவரது மகன் அசோக் பிரித்விராஜ் (33). இவரும் அதே தொழிலில் ஈடுபட்டு வந்தாா். திங்கள்கிழமை இரவு உணவகத்துக்கு உணவருந்த சென்றவா் வீடு திரும்பில்லை.
அவரது உறவினா்கள் தேடிய போது, செஞ்சி சாலையில் உள்ள ஓா் உணவகத்தின் முன் பலத்த காயங்களுடன் பிரித்விராஜ் இறந்து கிடந்தாா். தகவலறிந்த ரோஷணை போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினா். சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து ரோஷணை போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.