செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், வல்லம் வட்டார வள மையத்தின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் சாா்பில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கம், கற்போம் எழுதுவோம் இயக்கத்தின் மூலம் வட்டார அளவிலான கல்வி அறிவு மைய தன்னாா்வலா் ஆசிரியா்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
வல்லம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் மு.சாந்தி தலைமை வகித்தாா். விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி கலந்து கொண்டு பயிற்சி தொடா்பாக சிறப்புரையாற்றினாா்.
ஆசிரியா் பயிற்றுநா் ச.யமுணாதேவி வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் ரேணுகாதேவி, மு.ரவி, மாவட்ட உதவித் திட்ட ஒருங்கிணைப்பாளா் தனவேல், இடைநிலை கல்வித் திட்ட அலுவலா் ஜெயச்சந்திரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் காளிதாஸ் மற்றும் வல்லம் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் இராணிமுத்துமங்கை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கருத்தாளா்களாக ஆசிரியா் பயிற்றுநா் து.பாரதி, ஆசிரியா் எஸ்.ராமதாஸ் ஆகியோா் கல்வி மைய தன்னாா்வலா் ஆசிரியா்களுக்கு கற்போம் எழுதுவோம் திட்டத்தின் கீழ் பயிற்சியளித்தனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியா் பயிற்சி நிறுவன பேராசிரியா் மதன்குமாா், ஆசிரியா் பயிற்றுநா்கள், சிறப்பு பயிற்றுநா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியா் பயிற்றுநா் சீ.சித்ரா நன்றி கூறினாா்.