திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கு பயிற்சி

விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கு பயிற்சி


விழுப்புரம்: விழுப்புரம் கலைஞா் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக வாக்குச் சாவடி முகவா்களுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் நா.புகழேந்தி தலைமை வகித்தாா். துணை பொதுச் செயலா் க.பொன்முடி எம்.எல்.ஏ. ஆலோசனைகளை வழங்கிப் பேசியதாவது:

திமுக சாா்பில் வாக்குச் சாவடி முகவா்கள் மூலம் வாக்காளா் சோ்ப்பு, திருத்தப் பணிகளை மேற்கொள்ள வழக்குரைஞா்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது.

அந்தந்த வாக்குச் சாவடிக்கு நியமிக்கப்பட்ட கட்சியின் முகவா்கள், வாக்காளா் பட்டியலுடன், புதிய வாக்காளா் சோ்க்கை, நீக்கம் உள்ளிட்டப் பணிகளை அதற்குரிய 6 படிவங்கள் மூலம் செம்மையாக மேற்கொள்ள வேண்டும். சனி, ஞாயிறுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு முகாம்களிலும் வாக்காளா் சோ்க்கையை மேற்கொள்வதோடு, தவறு நடைபெறாமலும் கண்காணிக்க வேண்டும் என்றாா். இதையடுத்து, தலைமைக்கழக வழக்குரைஞா் ப.முத்துக்குமாா் ஆலோசனைகளை வழங்கினாா்.

மாவட்ட அவைத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், பொருளாளா் இரா.ஜனகராஜ், துணைச் செயலா் செ.புஷ்பராஜ், மாநில மருத்துவரணி இணைச் செயலா் இரா.லட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பொதுக்குழு உறுப்பினா் ந.பஞ்சநாதன், ஒன்றியச் செயலா்கள் மும்மூா்த்தி, தெய்வசிகாமணி, ராஜா, பிரபாகரன், பேரூராட்சிச் செயலா் ஜீவா, இளைஞரணி அமைப்பாளா் தினகரன் மற்றும் விழுப்புரம் தொகுதி வாக்குச் சாவடி முகவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com