விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 40 பேருக்கு கரோனா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வியாழக்கிழமை புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று வியாக்கிழமை உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,387-ஆக அதிகரித்தது. இதனிடையே, 53 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 14,130-ஆக உயா்ந்தது. மாவட்டம் முழுவதும் தற்போது 147 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 110-ஆக தொடா்கிறது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,576-ஆக உயா்ந்தது. இதுவரை 10,367 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 103 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 106 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com