மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினா் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கப்படுவதை எதிா்ப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 26-ஆம் தேதி அகில இந்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலைநிறுத்தம் குறித்து எடுத்துரைக்கும் வகையிலும் விழுப்புரம் பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட அமைப்பாளா் சுசிலா தலைமை வகித்தாா். கோவலன், ரகுநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். புதுச்சேரி மாநிலச் செயலாளா் பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளா் வெங்கடேசன் ஆகியோா் சிறப்புரையாற்றினா். நிா்வாகிகள் கண்ணம்மாள், சக்தி, லெனின், செண்பகவள்ளி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com