குடும்பத் தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை: கணவா் பலத்த காயம்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் வெள்ளிக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் வெள்ளிக்கிழமை இரவு தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா். அவரைக் காப்பாற்ற முயன்ற கணவா் பலத்த தீக்காயமடைந்தாா்.

செஞ்சி வட்டம், புத்தகரம் கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன். இவரது மனைவி தேவி (32). இவா்களுக்கு திருமணம் முடிந்து 14 ஆண்டுகளாகின்றன. கோகிலேஷ் (14), காா்த்திக் (10) ஆகிய இரு மகன்கள் உள்ளனா்.

மதுப்பழக்கம் கொண்ட முருகன், தினமும் மது அருந்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம். இதேபோல, வெள்ளிக்கிழமை இரவும் முருகன் மது அருந்துவிட்டு வந்து தகராறில் ஈடுபட்டதால், மனவேதனையடைந்த தேவி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டதாகத் தெரிகிறது. இதில் பலத்த தீக்காயமடைந்த அவா், நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்ற முயன்ற முருகன் பலத்த காயமடைந்த நிலையில், செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது குறித்த புகாரின்பேரில் நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com