தடையை மீறி செஞ்சிக் கோட்டையில் தீபம் ஏற்ற முயற்சி: 28 போ் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டை மலை மீது ஞாயிற்றுக்கிழமை தீபமேற்ற முயன்றதாக, பாஜக மற்றும் இந்து முன்னணியிா் 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக் கோட்டை மலை மீது ஞாயிற்றுக்கிழமை தீபமேற்ற முயன்றதாக, பாஜக மற்றும் இந்து முன்னணியிா் 28 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செஞ்சி ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உச்சிகளில் காா்த்திகை தீபம் ஏற்ற தொல்லியல் துறை தடை விதித்தது.

முன்னதாக பாஜக மற்றும் இந்து முன்னணியினா் சாா்பில், தொல்லியல் துறையிடம் தீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட பாஜக முன்னாள் தலைவா் ராஜேந்திரன் மற்றும் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலா் சிவ.சுப்பிரமணியம் தலைமையில், செஞ்சி கோட்டை மலை உச்சியில் தீபமேற்ற அந்த அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் முயன்றனராம். இதையடுத்து, ராஜேந்திரன், சிவ.சுப்பிரமணியம் உள்பட 28 பேரை செஞ்சி போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com