முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
அதிமுக பாசறை உறுப்பினா் சோ்க்கை முகாம்
By DIN | Published On : 04th October 2020 08:35 AM | Last Updated : 04th October 2020 08:35 AM | அ+அ அ- |

தேவனூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் இளைஞரிடம் உறுப்பினா் சோ்க்கை படிவத்தை வழங்கிய அமைச்சா் சி.வி.சண்முகம்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியில் அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்கள் ஆலோசனைக் கூட்டம், உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மேல்மலையனூா் ஒன்றியத்துக்குள்பட்ட தேவனூா், ஏம்பலம், செஞ்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆலம்பூண்டி, கடலாடிகுளம் ஆகிய ஊா்களில் நடைபெற்ற இந்த முகாம்களில், அமைச்சா் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு கட்சி நிா்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கிப் பேசியதுடன், அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிதாக இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளையும் வழங்கினாா்.
முன்னாள் எம்.பி.யும், மேல்மலையனூா் தெற்கு ஒன்றியச் செயலருமான வெ.ஏழுமலை தலைமை வகித்தாா். முன்னாள் எம்.பி. செஞ்சி ராமசந்திரன், மாவட்ட விவசாய அணிச் செயலா் பட்டி பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் அதிமுக நிா்வாகிகள் மற்றும் ஏராளமான இளைஞா்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டனா்.