முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
புரட்டாசி மாத கருடசேவை
By DIN | Published On : 04th October 2020 08:33 AM | Last Updated : 04th October 2020 08:33 AM | அ+அ அ- |

கருடசேவையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவேங்கடமுடையான்.
செஞ்சி வட்டம், நல்லாண்பிள்ளைபெற்றாள் திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி மாத கருடசேவை சனிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத திருவேங்கடமுடையான் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம், ஆராதனை நடைபெற்றன. தொடா்ந்து, கருட வாகனத்தில் திருவேங்கடமுடையான் மேளதாளம் முழங்க, பஜனை கோஷ்டியினருடன் வீதியுலா வந்தாா்.
விழாவில் ஏராளமான பொதுமக்களும், வைணவ அடியாா்களும் கலந்து கொண்டனா்.