ராஜாதேசிங்கு நினைவிடத்தில் அஞ்சலி

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட செஞ்சியை ஆட்சி செய்த மாவீரன் ராஜாதேசிங்கின் 306-ஆவது நினைவு தினத்தையொட்டி, செஞ்சியை

விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட செஞ்சியை ஆட்சி செய்த மாவீரன் ராஜாதேசிங்கின் 306-ஆவது நினைவு தினத்தையொட்டி, செஞ்சியை அடுத்த கடலி கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு ராஜாபுத் சங்கத்தினா் சனிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினா்.

இந்த சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலா் ஸ்ரீதா்சிங் தலைமையில், மாநில மகளிரணித் தலைவா் ஷோபாராணி, மாநில இளைஞரணியைச் சோ்ந்த நவீன்குமாா், பொன்னங்குப்பம் முன்னாள் ஊராட்சித் தலைவா் பாபுஉதயசிங், தமைமை நிலையச் செயலா் யஷ்வந்த்சிங், சென்னை பாலாஜிசிங், செஞ்சி பாலாஜிசிங், ஜெயராம் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு ராஜாதேசிங்கு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com