வானூா் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.14 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.14 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வானூா் அருகே திருச்சிற்றம்பலம் கூட்டுச் சாலைப் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவா் ராமச்சந்திரன் (60). இவா், வழக்கம்போல செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டுச் சென்றாா். இதை நோட்டமிட்ட மா்ம நபா்கள் நள்ளிரவு இவரது கடையின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து பணப்பெட்டியிலிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் அருகிலிருந்த துரித உணவுக் கடை, பெட்டிக் கடை ஆகியவற்றில் ரூ.4 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com