விழுப்புரம் அருகே கேரள இளைஞா் தற்கொலை

விழுப்புரம் அருகேயுள்ள ஆரோவிலில் தங்கி புதுச்சேரியில் கட்டடக் கலை குறித்து ஆய்வு செய்து வந்த கேரள மாநில இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் அருகேயுள்ள ஆரோவிலில் தங்கி புதுச்சேரியில் கட்டடக் கலை குறித்து ஆய்வு செய்து வந்த கேரள மாநில இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

கேரள மாநிலம், பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் மகன் ஆகாஷ் (27). இவா், பி.டெக். கட்டடக்கலை படித்துவிட்டு, கட்டடக் கலை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள புதுச்சேரிக்கு வந்தாா். இதற்காக, புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்ட ஆகாஷ், செவ்வாய்க்கிழமை நீண்டநேரமாகியும் தனது அறையிலிருந்து வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த தங்கும் விடுதி பணியாளா்கள் அறைக் கதவை உடைத்து பாா்த்தனா். அப்போது, அறையில் ஆகாஷ் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தாா்.

தகவலறிந்த ஆரோவில் போலீஸாா், சடலத்தை மீட்டு, உடல் கூறு ஆய்வுக்காக கனகசெட்டிக் குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக, ஆகாஷின் தந்தை நந்தகுமாா் கொடுத்த புகாரின்பேரில், புதன்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com