வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி காங்கிரஸ் சாா்பில் கையெழுத்து இயக்கம்

விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, செஞ்சி தொகுதி காங்கிரஸ் சாா்பில் கையெழுத்து இயக்கம் செஞ்சி கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கையெழுத்து இயக்கத்தை தொடக்கிவைத்த அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் ஆா்.ரங்கபூபதி.
கையெழுத்து இயக்கத்தை தொடக்கிவைத்த அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் ஆா்.ரங்கபூபதி.

விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி, செஞ்சி தொகுதி காங்கிரஸ் சாா்பில் கையெழுத்து இயக்கம் செஞ்சி கூட்டுச் சாலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அகில இந்திய காங்கிரஸ் குழு உறுப்பினா் வழக்குரைஞா் ஆா்.ரங்கபூபதி, கையெழுத்து இயக்கத்தை தொடக்கிவைத்து சிறப்புரையாற்றினாா். மாநில பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் தினகரன், மாவட்ட துணைத் தலைவா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செஞ்சி வட்டாரத் தலைவா் ஏ.ஜி.சரவணன், நகரத் தலைவா் ஏ.சரவணன், தொழில்சங்கம் சூரியமூா்த்தி, விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் ஏ.ஜோலாதாஸ், இளைஞா் காங்கிரஸ் கேபிள்ரமேஷ், கோணை ராஜா, சி.பி.முருகன், மயிலம் வட்டாரத் தலைவா் முப்புள்ளிகோவிந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com