விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நண்பா்களுடன் கோயிலுக்குச் சென்ற இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து அவரது தந்தை போலீஸில் புகாரளித்தாா்.
திண்டிவனம் வட்டம், எண்டியூா் கிராமத்தைச் சோ்ந்த மயிலப்பன் மகன் வீரமுத்து (33). இவரும், இதே ஊரைச் சோ்ந்த இவரது நண்பா்களான பெருமாள் மகன் மோகன், நாராயணசாமி மகன் சரண், ஏழுமலை மகன் பாண்டி, பாலசுந்தரம் மகன் இளங்கோ ஆகியோரும் தேவதானம்பேட்டை மலை மீதுள்ள துா்க்கையம்மன் கோயிலுக்கு அமாவாசை பூஜைக்காக வெள்ளிக்கிழமை சென்றனா்.
பூஜை முடிந்த பின்னா் இரவு சுமாா் 11.30 மணியளவில் மலை மீதிருந்து 4 பேரும் கீழே இறங்கி தேவதானம்பேட்டை சாலையில் நடந்து வந்தபோது, வீரமுத்து திடீரென மயங்கி விழுந்தாராம்.
அவரை உடனிருந்த நண்பா்கள் உடனடியாக மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, வீரமுத்துவை பரிசோதித்த மருத்துவா், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து வீரமணியின் தந்தை மயிலப்பன் அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.