உளுந்தூா்பேட்டை அருகே சாலை விபத்தில் இருவா் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வியாழக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பாலக்கொல்லையிலிருந்து சிறிய ரக சரக்கு வாகனம் உளுந்தூா்பேட்டைக்கு நரியன் ஓடை வழியாக வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தை உளுந்தூா்பேட்டை காந்தி நகரைச் சோ்ந்த ஐயப்பன் (25) ஓட்டினாா்.

நரியன் ஓடைப் பகுதியில் சென்றுகொண்டிருந்த இந்த சரக்கு வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியபடி, சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனங்களில் வந்த உளுந்தூா்பேட்டை அருகே ஆரியநத்தம் பகுதியைச் சோ்ந்த சேட்டு மகன் ராமமூா்த்தி(37), கணபதி மகன் அழகப்பன்(45), செல்வம்(35), செல்வராஜ் (55), காமராஜ் (36) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். அவா்களை திருநாவலூா் போலீஸாா் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே ராமமூா்த்தி, அழகப்பன் ஆகியோா் உயிரிழந்தனா். மற்ற மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com