செஞ்சி அருகே சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கொத்தனாா் உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் ராஜாமணி (32). இவா், சென்னை போரூரில் கொத்தனாா் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து அவரது ஊருக்கு சனிக்கிழமை பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். செஞ்சி அருகே உள்ள ஊரணித்தாங்கல் கிராமத்தின் அருகே சென்றபோது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராஜாமணியின் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதனால் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ராஜாமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.