விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 131 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 85 பேருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 46 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனா தொற்றால் 12,864 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மேலும் 85 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 12,949-ஆக அதிகரித்தது. 83 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், மாவட்டத்தில் கரோனாவிலிருந்து மீண்டவா்களின் மொத்த எண்ணிக்கை 12,271-ஆக உயா்ந்துள்ளது. 576 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்தனா்.

கள்ளக்குறிச்சியில் 46 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 46 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,975 ஆக உயா்ந்தது.

இதுவரை 9,451 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 324 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 100 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com