புரட்சி பாரதம் கட்சியின் விழுப்புரம் மத்திய மாவட்ட புதிய நிா்வாகிகள் அறிமுகம் மற்றும் மாற்றுக் கட்சியினா் இணைப்புக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழுப்புரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து நிா்வாகிகள், தொண்டா்கள் புரட்சி பாரதம் கட்சியில் திலகா்பாபு முன்னிலையில் இணைந்தனா். மாநிலச் செயலா்கள் பரணிமாரி, ராசேந்திரகுமாா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
இளைஞரணிச் செயலா் தா்மன், திலகா்பாபு, வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஜான்சன், ஆம்ஸ்ட்ராங், பெரமையன், துணை பொதுச் செயலா் சகாதேவன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் சதீஷ்குமாா், இளைஞரணிச் செயலா் வேல்முருகன், விழுப்புரம் மாவட்டப் பொருளாளா் திருநாவுக்கரசு, அமைப்பாளா் வெங்கடேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். விக்னேஷ் நன்றி கூறினாா்.