விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி காமராஜ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளி வளாகத்தில் காவல்துறை சாா்பில் உருவாக்கப்படவுள்ள தோப்புக்காக 1000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. அதன் தொடக்கமாக 75 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி, பள்ளி தலைமை ஆசிரியா் பழனி, விழுப்புரம் உள்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் பட்டாபிராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.