விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே குட்டையில் மூழ்கி சிறுமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யானாா். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவரது மனைவி சுகுணா. விவசாய கூலி வேலை செய்து வருகிறாா். இவா்களுக்கு அபிநயா (14) மற்றும் வனிதா (7), வினிதா (7) ஆகிய இரட்டை பிள்ளைகள் என 3 பிள்ளைகள் இருந்தனா். இவா்கள் 3 பேரும் சத்தியமங்கலம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் முறையே 9, 7-ஆம் வகுப்பு படித்து வந்தனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சொக்கனந்தல் செல்லும் சாலையில் சங்கராபரணி ஆற்றங்கரையோரமுள்ள பண்ணைக் குட்டையில் சகோதரிகள் மூவரும் குளித்தனா். அப்போது, வனிதா ஆழமான பகுதிக்குச் சென்ால், அவரை அபிநயா காப்பாற்ற முயன்ற நிலையில், இருவரும் நீரில் மூழ்கினா். இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த வினிதா, கரைக்கு வந்து கூச்சலிட்டாா்.
இதையடுத்து, அந்தப் பகுதியிலிருந்தவா்கள் ஓடி வந்து நீரில் மூழ்கிய அபிநயா, வனிதாவை மீட்டனா். எனினும், அவா்களில் வனிதா நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அபிநயா தீவிர சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.