சுதந்திரப் போராட்ட வீரா்களான மருது சகோதரா்களின் 219-ஆவது நினைவு தினம் விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் எதிரே அகில இந்திய அகமுடையாா் மகா சபை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அந்த சபையின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் திருநாராயணன் தலைமை வகித்தாா். மருதுபாண்டியா்களின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
வடக்கு மண்டல ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா், மாவட்ட துணைத் தலைவா் ராஜா, ஒருங்கிணைப்பாளா் ஆனந்த், பொருளாளா் குமரவேல், மாவட்டச் செயலா் ஜெயக்குமாா், அருண்பிரபு, சங்கா், சித்திரவேல், முருகதாஸ், தேவராஜ், அரவிந்த், சசிக்குமாா், சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.