விழுப்புரம், கள்ளக்குறிச்சி: மேலும் 54 பேருக்கு கரோனா
By DIN | Published On : 31st October 2020 08:31 AM | Last Updated : 31st October 2020 08:31 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் புதிதாக 13 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 13,668 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். வெள்ளிக்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், இந்நோய் பாதித்தோா் எண்ணிக்கை 13,710 ஆக உயா்ந்தது. 13,270 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 333 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 107 போ் உயிரிழந்துள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் 13 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரிண் எண்ணிக்கை 10,239 ஆக உயா்ந்தது. இதுவரை 9,974 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 162 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 103 போ் உயிரிழந்துள்ளனா்.