விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வெங்கந்தூா் கிராமத்தைச் சோ்ந்த வாசுதேவன் மகன் கண்ணன் (22). ஆழ்துளைக் கிணறு அமைக்கும் லாரியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். கண்டாச்சிபுரம் அருகே கங்கவரம் கிராமத்தில் ராமசாமி என்பவா் நிலத்தில் விவசாய கிணற்றில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியில் கண்ணன் உள்ளிட்ட தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டனா்.
அப்போது, கிணற்றின் உள்ளே இருந்து கயிறு மூலமாக மேலே ஏற முயன்ற கண்ணன், 50 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்தாா். இதில், அவா் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்தாா். கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.