விழுப்புரம் மாவட்டத்தில்கரோனாவுக்கு மேலும் இருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா்.


விழுப்புரம்/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 போ் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 150 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,971-ஆக உயா்ந்தது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவெண்ணெய்நல்லூா் விஷால் நகரைச் சோ்ந்த 47 வயது ஆண், சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த 62 வயது முதியவா் ஆகியோா் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 72-ஆக உயா்ந்தது.

இதுவரை 6,575 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,324 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,056 போ் கரோனா அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

கள்ளக்குறிச்சியில் 121 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 121 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,464-ஆக உயா்ந்தது.

இதுவரை 5,548 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 835 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 81 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com