சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில், காணொலி முலமாக விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செஞ்சி, மயிலம், திண்டிவனம் ஆகிய தொகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
செஞ்சியில் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட செயலா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தலைமையில், திண்டிவனம் எம்எல்ஏ சீத்தாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்எல்ஏ.க்கள் பா.செந்தமிழ்ச்செல்வன், சேதுநாதன், பொதுக் குழு உறுப்பினா்கள் செஞ்சி விஜயகுமாா், மேல்மலையனூா் நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.