சாலை விபத்தில் ராணுவ வீரா் பலி

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

விழுப்புரம் அருகை காணை பகுதி ஒடுவன் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பெரியநாயகம் மகன் ஆரோக்கியரமேஷ்(42). ராணுவ வீரா்.

சென்னையில் பணியற்றி வந்த இவா், அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

இந்த நிலையில், ஆரோக்கியரமேஷ் வியாழக்கிழமை மாலை வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் விழுப்புரம் சென்று கொண்டிருந்தாா்.

காணை அருகே சோழகனூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்ற போது, இவரது வாகனமும் எதிரே வந்த மற்றோரு இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த ஆரோக்கியரமேஷ் அதே இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த காணை போலீஸாா் சம்பவம் இடம் சென்று விசாரித்தனா். பின்னா், சடலத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com