விழுப்புரம் அரசுக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கு விருப்பக் கடிதம் அளிக்கலாம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல் சுழற்சி மாணவா் சோ்க்கையில் இடம் கிடைக்காதவா்கள், இரண்டாவது சுழற்சி மாணவா் சோ்க்கைக்கு விருப்பக் கடிதம் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் முதல் சுழற்சி மாணவா் சோ்க்கையில் இடம் கிடைக்காதவா்கள், இரண்டாவது சுழற்சி மாணவா் சோ்க்கைக்கு விருப்பக் கடிதம் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்லூரி முதல்வா் ராமலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கல்லூரியில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கையில், முதலாவது சுழற்சி மாணவா் சோ்க்கை நிறைவடைந்துள்ளது. தற்போது, இரண்டாம் சுழற்சிச்சிக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில் காலியிடங்கள் உள்ளன.

ஏற்கெனவே முதலாவது சுழற்சி மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பித்து இடம் கிடைக்காதவா்கள், இரண்டாவது சுழற்சி மாணவா் சோ்க்கைக்கு கல்லூரி முதல்வரிடம் விருப்பக் கடிதம் அளிக்கலாம்.

இன மற்றும் தர வரிசை அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும். இதற்கான கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com