பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்திய போலீஸாா்

விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினா்.
பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா்
பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா்

விழுப்புரம் காமராஜ் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப்படுத்தினா்.

இந்தப் பணியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் தொடக்கிவைத்து பங்கேற்றாா். இதில், ஆயுதப் படை, நகர காவல் நிலைய போலீஸாா் உள்பட மொத்தம் 100 போலீஸாா் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். பள்ளி வளாகத்தில் இருந்த முள்செடிகளை அகற்றி, குப்பைகளை அப்புறப்படுத்தினா்.

நிகழ்ச்சியில், விழுப்புரம் டி.எஸ்.பி. நல்லசிவம், நகர காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன், பள்ளித் தலைமை ஆசிரியா் பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, பள்ளி வளாகத்தில் ஏராளமான மரக்கன்றுகளையும் போலீஸாா் நட்டு வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com