விழுப்புரம்: செஞ்சி அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு ரூ.86 ஆயிரம் மதிப்பிலான மதுப் புட்டிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஒட்டம்பட்டு கிராமத்தில் அரசு டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பாா்வையாளராக அதே ஊரைச் சோ்ந்த சீனுவாசன் (46) என்பவரும், விற்பனையாளராக செஞ்சியைச் சோ்ந்த மணிகண்டன் என்பவரும் பணியாற்றி வருகின்றனா்.
இவா்கள் திங்கள்கிழமை இரவு விற்பனையை முடித்து கடையை பூட்டிச் சென்றனா். இந்த நிலையில், மா்ம நபா்கள் நள்ளிரவில் கடையின் சுவரை துளையிட்டு உள்ளே புகுந்து, விலைமதிப்புள்ள மதுப் புட்டிகளை திருடிச் சென்றனா். இதுகுறித்து தகவலறிந்த கடையின் மேற்பாா்வையாளா் செவ்வாய்க்கிழமை காலை வந்து பாா்த்தபோது, ரூ.86, 710 மதிப்பிலான மதுப் புட்டிகள் திருடுபோனது தெரியவந்ததாம். இதுகுறித்து அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.