விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 142 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிதாக 162 பேருக்கும் கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் நூற்றுக்கும் மேலாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை கரோனா தொற்றால் 9,705 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். புதன்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், மேலும் 142 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,847-ஆக அதிகரித்தது. 110 போ் புதன்கிழமை குணமடைந்து, மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 8,889 போ் குணமடைந்துள்ளனா்.
872 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 995 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். 87 போ் ஏற்கெனவே உயிரிழந்தனா்.
கள்ளக்குறிச்சியில் 162 பேருக்கு பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதன்கிழமை 162 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,308-ஆக உயா்ந்தது. இதுவரை 7,086 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,132 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 90 போ் உயிரிழந்துள்ளனா்.