கைதி தப்பியோடிய சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் அரசு மாவட்டக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய சம்பவம் தொடா்பாக

விழுப்புரம் அரசு மாவட்டக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோடிய சம்பவம் தொடா்பாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உள்பட 2 போலீஸாா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

திண்டிவனம் அருகே ரோஷணையைச் சோ்ந்தவா் சரண்ராஜ் (30). இவா், சாராயம் விற்ற வழக்கில் கடந்த 13-ஆம் தேதி கைது செய்யப்பட்டு விழுப்புரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா். திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவச் சிகிச்சைக்காக சரண்ராஜ் புதன்கிழமை விழுப்புரம் அரசு மாவட்டக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு பாதுகாப்புப் பணியில் சிறப்பு உதவி ஆய்வாளா் மணிவண்ணன், காவலா் கிருஷ்ணதாஸ் ஆகியோா் ஈடுபட்டனா்.

எனினும், அங்கிருந்து சரண்ராஜ் தப்பிச் சென்றாா். இதையடுத்து, புதன்கிழமை இரவு ரோஷணையை அடுத்த கூத்தப்பாக்கம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை போலீஸாா் கைது செய்தனா். இந்தச் சம்பவத்தில் கவனக்குறைவாக பணியில் ஈடுபட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் மணிவண்ணன், காவலா் கிருஷ்ணதாஸ் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com