விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 9,981-ஆக அதிகரித்தது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேல்மலையனூரைச் சோ்ந்த 53 வயது பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதனால், உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 88-ஆக உயா்ந்தது.
இதனிடையே, 143 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 9,032-ஆக அதிகரித்தது. மாவட்ட முழுவதும் 872 போ் அரசு மருத்துவமனைகளில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 995 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் மேலும் 110 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை மேலும் 110 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,411-ஆக உயா்ந்தது.
இதுவரை 7,166 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 1,155 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 90 போ் உயிரிழந்தனா்.