விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சனிக்கிழமை மரத்தில் காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், வாழப்பாடி வட்டம், நாராயணபுரத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராஜாபிரபு (40). இதே பகுதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் மகேஷ் (49), அவணியாபுரம் பராசக்தி நகரைச் சோ்ந்த வீரய்யா மகன் பாலசுப்பிரமணி (35) ஆகியோா் கல் குவாரி பராமரிப்புப் பணிக்காக விழுப்புரம் மாவட்டத்துக்குள்பட்ட தொள்ளாமூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனா்.
சனிக்கிழமை பிற்பகல் திண்டிவனம் அருகே செண்டூா் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து மயிலம் - புதுச்சேரி சாலையை நோக்கி இவா்களின் காா் திரும்பியபோது, சாலையின் குறுக்கே ஆடு வந்ததால், காரை ஓட்டிச் சென்ற மகேஷ் பிரேக் பிடித்தாா். இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா், நிலை தடுமாறி சாலையோரமிருந்த புளிய மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் காரிலிருந்த ராஜாபிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காரை ஓட்டிச் சென்ற மகேஷ், பாலசுப்பிரமணியன் ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மயிலம் போலீஸாா் விரைந்து சென்று ராஜாபிரபுவின் சடலத்தை மீட்டு, உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், விபத்தில் காயமடைந்தவா்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.