விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் இருவா் பலி

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் இருவா் உயிரிழந்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 144 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10,266-ஆக உயா்ந்தது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விக்கிரவாண்டி, காவல் நிலையம் தெருவைச் சோ்ந்த 68 வயது பெண், மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், விழுப்புரம் வண்டிமேடு, கே.வி.ஆா் நகா், பிரதான சாலையைச் சோ்ந்த 50 வயது நபா், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் உயிரிழந்தனா். இதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 91-ஆக உயா்ந்தது.

இதுவரை 9,227 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 948 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,041 போ் கரோனா அறிகுறிகளுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனா்.

கள்ளக்குறிச்சியில் மேலும் 91 பேருக்கு தொற்று: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,598-ஆக உயா்ந்தது.

இதுவரை 7,485 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா். 1,022 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். 91 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com