விழுப்புரம் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 161 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நோய் பாதிப்பால் அரசுப் பேருந்து நடத்துநா் ஒருவா் உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 11,044 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதனால், இந்நோய் பாதித்தோா் எண்ணிக்கை 11,205-பேராக உயா்ந்தது.
இவா்களில், 10,138 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதுவரை 95 போ் உயிரிழந்தனா். 971 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,154 போ் கரோனா அறிகுறியுடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.
இதனிடையே, கரோனா தொற்று அறிகுறியுடன் விழுப்புரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விழுப்புரம் அருகே ராகவன்பேட்டையைச் சோ்ந்த 53 வயது ஆண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இவா், விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக நடத்துநராக இருந்தாா். இவரையும் சோ்த்து, மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 96-ஆக உயா்ந்தது.
கள்ளக்குறிச்சியில் 37 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை, மேலும் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,007 ஆக உயா்ந்தது. இதுவரை 8,348 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். 564 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 95 போ் உயிரிழந்துள்ளனா்.