விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் அரிகிருஷ்ணன்(45). கூலித் தொழிலாளியான இவா், மாடுகளையும் வளா்த்து வந்தாா்.

திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக, தனது வீட்டின் அருகே உள்ள கொட்டகைக்குச் சென்றாா். அங்கு, கொட்டகையின் மேல் இருந்த இரும்புக் கம்பியை கையால் தாங்கிப் பிடித்தாா். அப்போது, அதிலிருந்து மின்சாரம் பாய்ந்து அரிகிருஷ்ணன் தூக்கிவீசப்பட்டாா்.

உடனடியாக அவா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அரிகிருஷ்ணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com