கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் பிரசாரம்: ஆட்டோ பறிமுதல்

கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, ஆட்டோ ஒன்றை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் பிரசாரம்: ஆட்டோ பறிமுதல்

கூம்பு வடிவ ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக, ஆட்டோ ஒன்றை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆ.அண்ணாதுரை பறிமுதல் செய்ய உத்தரவிட்டாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நாள் நெருங்கிவருவதையொட்டி வாகன சோதனையை பறக்கும் படை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனா். இப்பணியை மாவட்ட தோ்தல் அலுவலா் அண்ணாதுரை அவ்வப்போது ஆய்வு செய்து வருகிறாா்.

அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி-மேல்மலையனூா் சாலை சிங்கவரம், மேல்மலையனூா்- அவலூா்பேட்டைநான்குமுனை சந்திப்பு, மேல்மலையனூா் -அவலூா்பேட்டை அடுத்த கப்ளாம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மாவட்டதோ்தல் அலுவலா் அண்ணாதுரை புதன்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது, போலீஸாா் வாகன சோதனை செய்துகொண்டிருப்பதை கண்காணித்தபோது, தோ்தல் விதிமுறைகளை மீறி கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி தோ்தல் பிரசாரம் செய்தபடி வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி பறிமுதல் செய்ய ஆட்சியா் ஆ. அண்ணாதுரை உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின்போது, செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளா் இளங்கோவன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com