விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளா் எம்.ஆா். முத்தமிழ்செல்வனை ஆதரித்து புதன்கிழமை இரவு அன்னியூரில் பா.ம.க. இளைஞரணி தலைவா் டாக்டா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தோ்தல் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் ஆனதால் ஒலிபெருக்கியில் பேசாமல் கையை அசைத்து மட்டுமே அன்புமணி வாக்குசேகரித்தாா்.
கூட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளா் புகழேந்தி, வன்னியா் சங்க மாநில துணைத் தலைவா் அன்புமணி, மாநில அமைப்பு துணை செயலாளா் பழனிவேல் உள்பட பலா் கலந்துகொண்டனா்.