விழுப்புரம் நகரில் வீதி வீதியாகச் சென்று அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் புதன்கிழமை வாக்கு சேரித்தாா்.
அவா் கடந்த சில வாரங்களாகவே, கிராமம், கிராமமாகச் சென்று தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த நிலையில், புதன்கிழமை விழுப்புரம் நகா்ப் பகுதியில் சி.வி.சண்முகம் திறந்த வேனில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
விழுப்புரம், வடக்குத் தெரு பகுதியில் வாக்கு சேகரித்த அவருக்கு அதிமுக நகரத் துணைச் செயலரும், முன்னாள் நகா் மன்ற உறுப்பினருமான செந்தில் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, அவா் மேல் தெரு, மாசிலாமணி பேட்டை, கமலா நகா், செல்லியம்மன் கோவில் தெரு, கைவல்லியா் தெரு உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய்தாா்.
இதேபோல, விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் அமைச்சா் சி.வி.சண்முகம் வீதி, வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.
நகரச் செயலாளா் பாஸ்கரன், வண்டிமேடு ராமதாஸ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.