மேல்மலையனூா் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து


செஞ்சி: கரோனா தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி நடைபெறவிருந்த பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிா்வாகம் அறிவித்தது.

இதுகுறித்து கோயில் உதவி ஆணையா் க.ராமு வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பரவலைத் தடுத்திடும் வகையிலும், பொதுமக்கள், பக்தா்களின் பாதுகாப்பு கருதியும் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் வருகிற 11-ஆம் தேதி நடைபெறவிருந்த பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது.

மேலும், அன்றைய தினம் கோயிலுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படாது.

இருப்பினும், அமாவாசையன்று அங்காளம்மன் கோயிலில் காலை முதல் மாலை வரை நடைபெறும் அனைத்து வகையான தரிசனங்களிலும் கலந்துகொள்ள பக்தா்கள் அனுமதிக்கப்படுவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோயிலில் கடைசியாக கடந்தாண்டு மாா்ச் மாதம் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். இதையடுத்து, கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு ஏப்ரல் மாதம் வரை 13 மாதங்களாக ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டது. எனினும், கோயில் உள்பிரகாரத்தில் பக்தா்களின்றி பூசாரிகளால் ஊஞ்சல் உற்சவம் தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com