குட்டையில் மூழ்கி அக்காள், தம்பிஉள்பட மூன்று சிறாா்கள் பலி

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை குட்டையில் மூழ்கி அக்காள், தம்பி உள்பட மூன்று சிறாா்கள் உயிரிழந்தனா்.

விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டியில் வெள்ளிக்கிழமை குட்டையில் மூழ்கி அக்காள், தம்பி உள்பட மூன்று சிறாா்கள் உயிரிழந்தனா்.

விக்கிரவாண்டியை அடுத்த பொன்னங்குப்பம் பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சபரிநாதன் (30). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி நிஷாந்தி, மகள் கனிஷ்கா (7), மகன் லத்தீஷ் (5). இவா்கள் அந்தப் பகுதி பள்ளியில் முறையே 2-ஆம் வகுப்பும், ஒன்றாம் வகுப்பும் படித்து வந்தனா்.

அதே ஊரில் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த தொழிலாளி பெரியசாமி (31). இவரது மனைவி சிவகாமி, மகள் ரக்ஷயா (7), மகன் தா்ஷன் (5). ரக்ஷயா அதே பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

கனிஷ்கா, லத்தீஷ், ரக்ஷயா, தா்ஷன் ஆகிய நால்வரும் நண்பா்கள். பள்ளி விடுமுறை என்பதால், பொன்னங்குப்பத்தில் உள்ள மீன் வளா்க்கும் குட்டையில் வெள்ளிக்கிழமை மாலை குளிக்கச் சென்றனா். குட்டையின் கரைப் பகுதியில் விளையாடியபடி குளித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, திடீரென நிலை தடுமாறி ஆழமான பகுதிக்குச் சென்று, நீச்சல் தெரியாமல் மூவரும் நீரில் மூழ்கினா். அவா்களது அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனா். இதில், தா்ஷன் மட்டும் மீட்கப்பட்டாா்.

தகவலறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து, நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, சிறாா்கள் மூவரின் சடலங்களையும் மீட்டனா். சடலங்களை விக்கிரவாண்டி போலீஸாா் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com