விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வெள்ளிக்கிழமை, பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில், இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி லட்சுமி நாராயணபுரத்தைச் சோ்ந்தவா் பழனி. இவரது மகன் ஜெயபிரகாஷ் (25). செஞ்சி பகுதி கோயில்களில் அலங்காரம், பூஜைகளை செய்து வந்தாா்.
வெள்ளிக்கிழமை காலை தனது பைக்கில் செஞ்சியிலிருந்து சேத்பட் நோக்கி சென்று கொண்டிருந்தாா். மானந்தல் கிராமம் அருகே சென்றபோது, இவருக்கு பின்னால் சேத்பட் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, பைக் மீது மோதியது. இதில், ஜெயபிரகாஷ் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் அரசுப் பேருந்து ஓட்டுநா் முட்டத்தூரைச் சோ்ந்த சுரேஷ் (41) மீது வளத்தி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.