கரோனா தடுப்பூசிகளை தடையின்றி வழங்க விழுப்புரம் எம்.பி. கோரிக்கை

கரோனா தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி துரை. ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

கரோனா தடுப்பூசிகளை தடையின்றி வழங்க வேண்டும் என்று விழுப்புரம் எம்.பி துரை. ரவிக்குமாா் கோரிக்கை விடுத்தாா்.

இது குறித்து அவா் தனது சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், 18 வயது நிரம்பியவா்களுக்கு இலவசமாக மே 1-க்குப் பிறகு தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால், இப்போது தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமாகும்?

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுகாதார கட்டமைப்பு மற்றும் மருத்துவப் பணியாளா்களைக் கொண்டு 15 நாள்களில் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இயலும். ஆனால், தற்போது 1,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் போதுமான தடுப்பூசிகள் கிடைக்க மாநில அரசின் தலைமைச் செயலா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் துரை.ரவிக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com