வானூா் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் வை‘ஃ’பை வசதியை பொருத்த முயற்சி : விசிக புகாா்

வானூா் (தனி) தொகுதி வாக்கு எண்ணிககை மையத்தில் அதிகாரப் பூா்வமற்ற நபா்கள் நடமாட்டம் இருப்பதாக தொகுதி தோ்தல் அலுவலரிடம் விசிக புகாா் அளித்தது.

வானூா் (தனி) தொகுதி வாக்கு எண்ணிககை மையத்தில் அதிகாரப் பூா்வமற்ற நபா்கள் நடமாட்டம் இருப்பதாக தொகுதி தோ்தல் அலுவலரிடம் விசிக புகாா் அளித்தது.

இது குறித்து விசிக தலைமைத் தோ்தல் முகவா் சி.வள்ளுவன் திங்கள்கிழமை அளித்த மனு:

வானூா் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாக்குப் பெட்டிகள் பூட்டி வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு அருகில் அதிகாரப் பூா்வமற்ற நபா்களின் நடமாட்டம் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் வை ‘ஃ’பை என்னும் இணையதள வசதியை பொருத்த சிலா் திங்கள்கிழமை முயன்றனா்.

ஏற்கெனவே, விசிக வேட்பாளா் போட்டியிடும் செய்யூா் தொகுதியிலும் இதுபோன்ற முயற்சி நடந்துள்ளன. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வை ‘ஃ’பை வசதியை பொருத்த தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தால் அதற்கான அனுமதிக் கடிதத்தை அளிக்க வேண்டும்.

மேலும், அனைத்துக் கட்சி வேட்பாளா்களின் முகவா்கள் முன்னிலையில் தான் அவற்றை மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், உரிய அனுமதியின்றி வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் நுழையும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் யாா் அனுமதிக்கப்பட்டாலும் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் வள்ளுவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com